Tuesday, May 17, 2011

மனிதன் கடவுளிடம் ....

பல காலமாய் ஒரு மனிதன் கடவுளிடம் உரையாட வேண்டும் என தவம் இருந்தான் .

ஒரு நாள் , கடவுள் அவன் முன்னே தோன்றினார் ....

கடவுள் : பக்தா உன் பக்தியை மெச்சினேன் .உனக்கு என்ன வேண்டும் ?
மனிதன் : கடவுளே என் தவத்திற்கு செவிசாய்தமைக்கு நன்றி .எனக்கு ஒரு வரம் வேண்டும்.
கடவுள் : என்ன வரம் வேண்டும் ?
மனிதன் : நான் நினைத்தது மட்டுமே நடக்க வேண்டும் .
கடவுள் : (இந்த முறை ) ,அது கடினம் .வேறு ஏதேனும் கேள் .
மனிதன் :கடவுளே ,நான் இம்முறை கேட்பதை நீர் கண்டிப்பாக அளிக்க வேண்டும் .
கடவுள் : கண்டிப்பாக .
மனிதன் : சரி .நான் நினைக்காதது நடக்க கூடாது .
கடவுள் : !!!!!!!!!!!